பிரபல நடிகையை கன்னத்தில் அடித்த பாண்டியன்…!! அடித்ததற்கு காரணம் இயக்குனர் பாரதிராஜா தான்.
ஒரு நடிகர் உருவாக வேண்டும் என்றால் அவர் சொந்தமாக அவரது முயற்சியில் முன்னேறுவது என்பது ஒரு புறம் இருந்தாலும் அவர்களை 90% மேல் இயக்குனர்களால் மட்டும்தான் முடியும் ஏனென்றால் அவர்கள் இல்லாவிட்டால் ஒரு நடிகன் உருவாகுவது என்பது கிடையாது திரைப்படத்தை அதாவது சாதாரண கதையை அவர்கள் முன்னால் ஒரு பெரிய காட்சிக்கு கொண்டு வருவது மிகப்பெரிய கஷ்டமான செயல் அந்த செயலை தான் மிக அற்புதமாக வெளிப்படுத்தி பல நடிகர்களை உருவாக்குபவர்கள் தான் இயக்குனர்கள்.
அவ்வாறு தமிழ் சினிமாவின் பழைய நடிகர்களை உருவாக்கியவர் தான் இயக்குனர் இமயம் என்று சொல்லப்படும் பாரதிராஜா அவர்கள் இவருடைய திரைப்படம் என்றாலே அதற்கென்று ரசிகர்கள் கூட்டம் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கும் அளவிற்கு இவரது திரைப்படங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும் இவருடைய திரைப்படங்கள் வந்தாலே தியேட்டர்களில் அலைமோது மாதிரி எந்த கதாநாயகன் ஹீரோவாக நடித்திருந்தாலும் அந்த படம் வெற்றி தான்.
எந்த ஹீரோ நடித்து இருந்தாலும் வெற்றி தான் என்ற பெயர் வருவதற்கு காரணம் அந்த இயக்குனரின் படைப்பு ஒரு கிராமத்து கதை என்றால் அது அப்படியே நம் கண் முன்னால் நடப்பது அதாவது நமது வீடு கிராமத்தில் இருக்கிறது என்றால் அது அப்படியே நம் கண் முன் நடப்பது போன்று காட்சிக்கு கொண்டு போவது தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சிறந்த படைப்பாக இருக்கும் குறிப்பாக.
அவர் இயக்கத்தில் பல வெற்றி திரைப்படங்கள் வந்திருக்கின்றன பாக்யராஜ் அவர்களை வைத்து தாவணி கனவுகள் கிழக்கே போகும் ரயில் மற்றும் அனைவரையும் அதாவது தமிழக மக்களை தன் வசப்படுத்திய திரைப்படம் என்றால் அது மண்வாசனை இந்த திரைப்படத்தில் நடிகர் பாண்டியன் ரேவதி இவர்கள் இருவரும் அறிமுக திரைப்படம்தான் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம்.
இந்த திரைப்படம் தான் நடிகை ரேவதியின் முதல் திரைப்படம் என்பதால் அவருக்கு சரிவர நடிக்க வரவில்லை பாரதிராஜா அவர்கள் நடிப்பு வரவில்லை என்றால் அவர்களிடம் இருந்து எப்படியாவது நடிப்பை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர் இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் அப்படி இருக்கும் பொழுது நடிகை ரேவதியை அடிக்கும் காட்சி வந்திருக்கிறது அதில் ரேவதி சரியாக நடிக்கவில்லை இதனால் கோபம் கொண்ட பாரதிராஜா அவர்கள்.
நடிகர் பாண்டியன் அவர்களை அழைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார் இதே கோபத்தோடு போய் நீ ரேவதியை நடிக்க என்று கூறியிருக்கிறார் அதே கோபத்தில் பாண்டியன் அவர்கள் ரேவதியை கன்னத்தில் அடித்து இருக்கிறார் அப்பொழுது கடைசி காட்சி என்பதால் நடிகை ரேவதி கதறி அழ வேண்டும் அதை அப்படியே தத்ரூபமாக எடுத்து இருக்கிறார் இந்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
இதனை கேட்ட ரசிகர்கள் இதனால் தான் இந்த திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள் ஒரு இயக்குனர் எப்படி எல்லாம் திரைப்படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று எண்ணத்தோடு போராடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு முக்கியமான திரைப்படம் அது மட்டும் இல்லாமல் நடிக்க வராத புதுமுக நடிகையை பல படங்களில் நடித்த அனுபவசாலி போன்ற நடிக்க வைத்த பெருமை இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு உண்டு.