தென்னிந்திய திரை துறையில் மிகவும் பிரபலமான நடிகை சினேகா.தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மக்களின் புன்னகை அரசியாக நடிகையாக வலம் வந்த சினேகா மேலும் இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.
இவர் நடித்த காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வந்தவர் . இவர் ஒரு தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது உண்மையான பெயர் சுகாஷினி ராஜாராம் ஆனால் திரைப்படத்திற்குப் பிறகு இவர் சினேகா என்று மாற்றிக் கொண்டார்.
இவர்தமிழ்,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் முதலில் அறிமுகமானது மலையாளம் படம் மூலமாகத்தான். மலையாள படத்தில் நடித்த பின்பு தமிழ், தெலுங்கு என்று மொழிப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். முதல் முதலில் தமிழில் நடித்த படம் 2000ம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா பின்பு தமிழில் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய உச்சத்தை அடைந்தார்.
பல விளம்பரங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் இவர் சென்னை இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் , சிட்னி ஸ்லேடன் ஃபேஷன் வீக் மற்றும் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற பிற நிகழ்ச்சிகள் போன்ற பல ஃபேஷன் ஷோக்களிலும் அவர் தோன்றினார்.
இவரும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் தற்போது இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றன தற்போது அவர்களது வாழ்க்கையை மிகவும் அழகாய் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.இதனை தொடர்ந்து சினேகா அவர்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.